Google Find us on Google+ Computer Tips: புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வாழ்த்துரை

Sunday, December 8, 2013

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வாழ்த்துரை


                      நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக முழுமையான வெற்றி பெற்றால் மட்டுமே மத்தியில் சிறந்த ஆட்சியும் நிர்வாகமும் நடைபெறுவதற்கு பங்களிப்பை வழங்க முடியும் என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது.
எம்.ஜி.ஆர். தமிழகத்துக்கு வழங்கிய அதிமுகதான், எப்போதுமே தமிழக மக்களின் முழு அன்பைப் பெற்ற மாபெரும் அரசியல் சக்தி என்பது இந்த வெற்றியால் உறுதிப்பட்டிருக்கிறது.
அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே போல் சிறப்பாகப் பணியாற்றி, அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வென்றது என்ற நிலை உருவாக இந்த நாளில் உறுதி ஏற்போம்.
நம்முடைய உழைப்பும் வெற்றியும் தமிழ்ச் சமூகத்துக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஏற்றம் பெற வேண்டும்; அவர்களுடைய வாழ்வு மகிழ்ச்சிக்குரிய வாழ்வாக அமைந்திட வேண்டும்; எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற சமத்துவ சமூகம் உருவாகிட வேண்டும் என்பதற்காகத்தான் எண்ணற்ற தியாகங்களை நாம் மேற்கொண்டு அரசியல் பணியில், மக்கள் தொண்டில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முழுமையான வெற்றியை அதிமுக பெற்றால் மட்டுமே அகில இந்திய அளவில் சிறந்த ஆட்சியும் நிர்வாகமும் நடைபெறுவதற்கு நம்முடைய பங்களிப்பை நாம் ஆற்ற முடியும். எனவேதான், ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவைப் போலவே வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நம்முடைய வெற்றி அமைய வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன்.
ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்த வெற்றிக்காக அயராது உழைத்திட்ட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் ஜெயலலிதா.

No comments:

Post a Comment